Monday, December 23, 2013

குடி­சன மதிப்­பீட்­டின்­படி 697,406 குடும்­பங்­க­ளுக்கும் வீடுகள் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். விமல் வீர­வன்ச!

s232523rd of December 2013
குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது . இந்நிலையில் , கொழும்பில் சேரிப்புறங்களில் வாழ்கின்ற 65000 குடும்பங்களில் 20000 குடும்பங்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் . அத்துடன் மலையகத்தில் 23 வீட்டுத்திட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மாணப் பொறியியல் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார் .
 
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் .
 
அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு மேலும் கூறுகையில் , எனது அமைச்சின் மீதான விவாதம் தொடர்பாக சார்பாகவும் எதிராகவும் இச்சபையில் கருத்து தெரிவித்த அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் . மத்தேகொடவில் வீடமைப்புக்களுக்கான தெரிவுகள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டே வீடுகள் வழங்கப்படவுள்ளது . அரச கணக்காய்வுத் திணைக்களமே மேற்கொள்ளப்பட்டது .
 
சபையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரேமதாசாவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேசினார்கள் .
 
அவரது வீட்டுத் திட்டங்களில் 1978-1983 வரை காலத்தில் ஒரு இலட்சம் வீடுகள் 1990 - 1994 வரை 10 இலட்சம் வீடுகள் , 1984-1989 வரை 15 இலட்சம் வீட்டுத் திட்டங்களை பிரேமதாசவின் வீட்டுத் திட்டங்களாகும் . ஆனால் இது நிறைவேறியதா இல்லை இக்கால கட்டத்தில் 7 இலட்சத்து 10,000 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டன .
 
அதேவேளை இந்த எண்ணிக்கையில் வீடுகள் அமைக்கப்பட்டதை மட்டும் உள்ளடக்கப்படவில்லை . ஜன்னல் வழங்கியதும் மலசலகூடத்திற்கு உபகரணங்கள் வழங்கியதும் வீடுகள் அமைக்கப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது .
 
இன்றைய குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 406 பேருக்கு வீடுகள் தேவைப்படுகின்றது . அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களின் காரணமாகவே வீடுகள் தேவைப்படும் மக்களின் தொகை குறைந்தது .
 
2010 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை 79.681 வீடுகளும் புனரமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
 
இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் நகரில் வாழும் மக்களுக்கான திட்டங்கள் தொடர்பில் மிக வேகமான திட்டங்களை முன்னெடுத்தோம் . ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இந்த முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது .
 
யக்கல , அந்தான , கண்டி , கலகெதர பிரதேசம் போன்ற பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . மீனவ குடும்பங்களுக்காக , மொறட்டுவ லுனாவ பிரதேசத்தில் 3000 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன . இவ் வீடுகள் ஜனவரி மாதமளவில் மீனவ குடும்பங்களுக்கு கையளிக்கப்படும் . தெற்காசியாவிலேயே குறைந்த மிகக் குறைந்த குடிசைகள் உள்ள நாடு இலங்கை . குறைபாடுகளுடன் வாழ்ந்த மக்களுக்கு இன்று அடிப்படை வசதிகளுடன் வீடுகளை வழங்கியுள்ளோம் .
 
இன்று கிராமங்களிலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களின் தொகை நூற்றுக்கு 14.3 வீதம் குறைந்துள்ளது .
 
கிராமத்தவர்களின் கொழும்பு வருகையினாலேயே சேரிகள் அதிகரித்தன . இது இன்று குறைந்து விட்டது . எப்படி இது நடந்தது ? அபிவிருத்திகளை கிராமத்திற்கு கொண்டு சென்றதனாலேயே இது இடம்பெற்றது .
 
கொழும்பில் இன்று 65000 க்கு மேல் குடும்பங்கள் குடிசைகளிலும் தோட்டங்களில் நெருக்கடியாக வாழ்கின்றன .
 
இவ்வாறான வாழ்க்கை முறை காரணமாகவே சமூக விரோத செயல்களில் போதைவஸ்துக்கள் மதுபாவனை என்ற பழக்கங்களுடனான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர் . இதனை மாற்றியமைத்து மக்களுக்கான புதுயுகத்தை உருவாக்குவோம் அதற்காகவே தொடர் மாடித் திட்டங்களை நிர்மாணித்து வருகின்றோம் .
 
2015 ஆம் ஆண்டளவில் 65000 பேரின் 20000 குடும்பங்களுக்கு தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நிலைமையை உருவாக்குவோம் . கடந்த 3 வருடங்களில் அரச ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் அரச வங்கிகளிலிருந்து 15 பில்லியன் வீடுகளை அமைக்க கடன்கள் வழங்கப்பட்டது . மறக்கப்பட்ட மலையக மக்களுக்கான பல திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த வரவு - செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது .
 
தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக தோட்ட கம்பனிகளை வங்கிகளில் பிணையாளிகளாக்கி கடன்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் . இதற்கு நாமும் பங்களிப்பு செய்கிறோம் .
 
யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் அழி்க்கப்பட்ட குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது . ஜனவரி மாதம் மக்களுக்கு கையளிக்கப்படும் .
 
30 , 40 வருடங்களாக கவனிக்கப்படாது மரங்கள் வளர்ந்து அசுத்த நீர் வழிந்தோடிய தொடர் மாடித்திட்டம் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன . வர்ணம் மட்டும் பூசவில்லை . குறைபாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது . மாளிகாவத்தை , புதுக்கடை , வாழைத்தோட்டம என தொடர்மாடி வீடமைப்பு திட்டங்கள் உட்பட பல இவ்வாறு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன . இப் பகுதி மக்கள் மீண்டும் தமது வீடுகள் உயிர் பெற்றுள்ளதாக கூறுகின்றனர் .
 
இந்நடவடிக்கைகளின் போது தமிழ் மக்கள் , முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள் என பார்க்கவில்லை . சிங்கள மக்கள் மட்டும் வாழ்கிறார்களா என்ற இனவாதம் பார்க்க வில்லை . தேர்தல்களில் எமக்கு வாக்களிக்கவில்லை என்ற கோணத்தில் பார்க்கவில்லை என்றார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...