Sunday, December 22, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் நிராகரிக்கப்படும் - அரசாங்கம்!

22nd of December 2013
எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்கள் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும்,இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நிராகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது.

இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக போராடும் தைரியமும், ஆற்றலும் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து உலகிற்கு எடுத்துக்காட்ட மனித உரிமைப் பேரவை அமர்வுகளை பயன்படுத்திக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...