Sunday, December 22, 2013

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை!

22nd of December 2013
சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெலிக்கடை, மெகசின் மற்றும் புதிய சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

இதன்படி நாளை முதல் சிறைச்சாலைகளில் அதி தொழிநுட்பம் வாய்ந்த கருவிகள் 4 பொருத்தப்படவுள்ளன.

எதிர்வரும் காலங்களில் ஏனைய சிறைச்சாலைகளிலும் அதிதொழிநுட்பம் கொண்ட கருவிகளை பொருத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கொழும்பு பெண்கள் சிறைச்சாலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணைவியார் ஷிராந்தி ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது தாய்மாருடன் சிறையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...