Friday, December 20, 2013

இலங்­கைக்கு எந்த நோக்­கத்­துக்­காக விசா எடுத்து வந்தீர்களோ அந்த நோக்­கத்துடன் செயற்­ப­டுங்கள்: வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட இந்தியப் பிரஜைகளுக்கு ஆனந்தி கன­க­ரட்ணம் அறிவுரை!

20th of December 2013
இலங்­கைக்கு எந்த நோக்­கத்­துக்­காக விசா எடுத்து வந்தீர்களோ அந்த நோக்­கத்துடன் செயற்­ப­டுங்கள்´ என உல்­லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வந்து மன்னாரில் சட்­ட­வி­ரோதமாக துணி வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட இந்தியப் பிரஜைகளுக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கன­க­ரட்ணம் அறிவுரை கூறியுள்ளார்.

பண்டிகைக் காலங்களை முன்­னிட்டு, இலங்கை வந்து வியா­பார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்­தியப் பிர­ஜைகள் இருவர் நேற்று (19) மன்னார் நீதி­மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் நீதி­மன்றத்தில் இடம்­பெற்ற இருவேறு வழக்­கு­களில் இரண்டு இந்­தியப் பிர­ஜை­க­ளுக்கு எதி­ரா­கவும், இலங்கையர்கள் இருவருக்கு எதி­ரா­கவும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்­தனர்.

இதில் இந்­தியர் இருவர் இலங்­கைக்கு உல்­லாசப் பயண விசாவில் வந்து இந்­திய ஆடை அணி­க­லங்­களை சட்­ட­வி­ரோதமாக விற்பனை செய்ததாகவும், ஏனைய இரு இலங்­கை­யர்­களும் இவர்­க­ளுக்கு உறுது­ணை­யாக செயற்பட்­ட­தாகவும் வழக்கு தாக்கல் செய்யப்­பட்­டி­ருந்­தது.

இதன்போது, "எந்த அடிப்­ப­டை­யி­லான விசாவில் இலங்­கைக்கு வருகின்­றீர்­களோ அதற்­க­மைய செயற்­பட்டால் இங்கு இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாது.

ஆகவே வியா­பார நோக்­கோடு இங்கு வர விரும்­பினால் அதற்­கான பய­ணச்­சீட்டோடு வந்து செயற்­ப­டுங்கள் என நீதி­பதி அறி­வுரை வழங்கினார்.

மேலும் அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...