Friday, December 20, 2013

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பது இனிமேல் நடைபெறமாட்டாது: யாழ். இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம்!

20th of December 2013
இந்திய மீனவர்களின் அத்துமீறி இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பது இனிமேல்நடைபெறமாட்டாது என யாழ். இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உறுதியழித்ததாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாச தலைவர் தெரிவித்தார்.
 
இந்திய மீனவர்கள் பிரச்சனை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கையின்கடலுக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடமாட்டார்கள் என்ற தகவலைப் புதுடில்லி தமக்கு வழங்கியிருப்பதாக வட மாகாண மீனவ சங்கப் பிரதிநிதிகள் நேற்றைய சந்திப்பில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய மீனவர்களினால் வடகடல் மீனவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டதற்கு நஷ்;டஈடு தொடர்பாக இந்திய அரசாங்கத்துடனும் இலங்கை அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூடிய விரைவில் நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...