Monday, December 23, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாவை பேசியும் பயனில்லை: நாவிதன்வெளி வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

மாவை பேசியும் பயனில்லை: நாவிதன்வெளி வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு23rd of December 2013
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அம்பாரை நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலுவுத திட்டம் அக் கட்சியின் உப தவிசாளரின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாள் மாவை சேனாதிராஜா நேற்று  நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலுவுத் திட்டம் தோற்கடிக்கப்படக் கூடாது என இணக்கப்பாட்டுக்கு கொண்டுவந்தபோதும் அது பயனளிக்கவில்லை.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் சி.குணரத்தினம் தலைமையில் இன்று (23) வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னர் வாக்கெடுப்பில் தவிசாளர் உட்பட மூன்று பேர் வாக்களித்ததுடன் எதிர்கடசியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சுதரந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் உப தவிசாளர் அமரதாஸ ஆனந்தனின் ஆதரவுடன் 4 பேர் வாக்களித்து தோற்கடித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 17 ம் திகதி வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அது அன்றையதினம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உப தவிசாள் அரதாஸ ஆனந்தனை கடந்த நவம்பர் மாதம் 22 ம் திகதி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                    

 
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...