Monday, January 6, 2014

பாரத்த லக்ஸ்மன் கொலை வழக்கின் முதலாவது பிரதிவாதியை கைது செய்ய உத்தரவு!

Monday, 6th of January 2014
பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் முதலாவது பிரதிவாதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
 
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முதலாவது பிரதிவாதி ஆஜராகியிருக்கவில்லை.
 
வழக்கின் மூன்றாவது பிரதிவாதி சுகயீனமுற்றுள்ளதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் 11ஆவது பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பாராளுமன்றத்தில் இன்று ஆஜரானார்.
 
இந்த வழக்கு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...