Monday, January 6, 2014

மன்னார் மனித புதைகுழி புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களுடையது: இலங்கைப் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Monday, 6th of January 2014
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியில் அகழ்வுப்
பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் இதுபுலிகளால் கொல்லப்பட்டுள்ளவர்களுடையதாக இருக்கலாம் என அறிவித்துள்ளது .

இந்த மனித புதைக்குழியில் இருந்து இதுவரை 18 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .

அனுராதபுரம் வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி , பேராதனை பல்லைக்கழக மண் ஆராய்ச்சிப் பிரிவின் அதிகாரி ஆகியோர் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

நீண்டகாலமாக புலிகள் வசமிருந்த பிரதேசம் இதுவெனவும் , அவர்களால் கொலை செய்யப்பட்டவர்களே இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .

கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி மன்னார் யு -32 வீதியின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது .

பின்னர் மன்னார் நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய புதைக்குழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இப்புதைகுழி இருந்த இடத்தில் முன்னர் நீணடகாலமாக இராணுவம் முகாமைத்து நிலைகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...