Friday, January 17, 2014

தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday,17th of January 2014
தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரிவினைவாதத்தை ஊக்குவிதது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டாது, சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் சரியான பாதையை காட்டுவதனை விடவும், சேறு பூசுவதில் நாட்டம் கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் எந்தவொரு இடத்தில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் எனத் தெரிவித்துள்ளார்.

அச்சமோ சந்தேகமோ இன்றி அனைவரும் வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தமக்கு உள்ள கடமைகளிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...