Friday, January 17, 2014

ஆனந்தி சசிதரன் புனிதரல்ல – பாதுகாப்பு அமைச்சு!

Friday,17th of January 2014
வட மாகாண சபையின் உறுப்பினர் ஆனந்த சசிதரன் ஓர் புனிதரல்ல என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனினும், ஆனந்த சசிதரனுக்கும் புலிகளுக்கும் இடையிலான கடந்தகால உறவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

யுத்த காலத்திலும் அதன் பின்னரும் ஆனந்தி சசிதரனின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக ஆனந்தியின் கணவர் எழிலன் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஊடறுக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் துறையை உருவாக்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனந்தி சசிதரனுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே தாக்கப்பட்டதாகவும், அரசியல் போர்வையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...