Sunday, January 5, 2014

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை?

Sunday,5th of January 2014
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கு உரிய கடமைகளை மாத்திரமே செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினருமான பியசிறி விஜேநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 புலிகள் இயக்கம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாக தமக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடக்கில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று கோருவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...