Sunday, January 5, 2014

தெற்­கா­சி­யாவில் பன்­மு­கத்­தன்­மையின் சவால்கள்' சந்­தி­ரிகா தலை­மையில் கொழும்பில் விசேட கருத்­த­ரங்கு!

Monday, 6th of January 2014
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும்சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது .
 
தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது .

அத்துடன் இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி , இந்தியாவின் , பேராசிரியர் ரஜீவ் பார்கவா , பிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரீலோட் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர் .

அமைதியான ஒத்திணங்கிய வாழ்வு , மத சகிப்புத்தன்மை பன்மை சமூகங்கள் போன்ற தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்படவுள்ளன . மதங்களுக்கு இடையில் பிணக்குளை உருவாக்கும் செயற்பாடுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பாக கருத்தரங்களில் விரிவாக ஆராயப்படும்

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...