Sunday, January 5, 2014

கருணா, பிள்ளையான், கே.பி போன்று பதுமனையும் இலங்கை அரசு இணைத்துள்ளது! வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்!

Monday, 6th of January 2014
கருணா , பிள்ளையான் , கே . பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று
பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது . என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
 அவர் மேலும் கருத்துக் கூறுகையில் ,
புலிகள் அமைப்பு பதுமனின் தலைமையில் மீளக்கட்டி எழுப்பப்படவுள்ளதாகக் கூறி தனக்கு ஈமெயில் ஒன்று கிடைத்துள்ளது .
வடக்கில் இராணுவத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்துள்ளது .
மேலும் கே . பி , கருணா , பிள்ளையான் ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தனது பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவருகிறது .
 யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வடபுலத்தில் 150,000 படையினர் நிலைகொள்ளச் செயப்பட்டுள்ளனர் .
 இதன் காரணமாக பல பிரச்சினைகள் வடக்கில் எழுந்துள்ளன .
இவர்களால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிகளவான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன .
இதனால் அவர்களால் தொழில் செய்யவும் முடியாத நிலையேற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...